2
திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 4 பைகளில் ரூ.18 லட்சம் மதிப்பிலான 36 கிலோ கஞ்சா சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது. கஞ்சா போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, வழக்குப்பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தகவல் : GETLOKALAPP