திருப்பூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு தங்கவேலை, மதுபோதையில் சுற்றித்திரிந்த சுரேஷ்குமார் (41) என்பவர் தாக்கியுள்ளார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று (டிசம்பர் 19) சுரேஷ்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.