ராமநாதபுரம்: 08-12-23
கமுதியில், மது ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கைகளில் பாதாகைகளை ஏந்தியபடி காவல் துறையினர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் DSP மணிகண்டன் தலைமையில், இன்ஸ்பெக்டர் குருநாதன் முன்னிலையில் மதுவிலக்கு மற்றும் கள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் கமுதி பேருந்து நிலையத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிங்கப்புலியாபட்டி வரை சென்று மீண்டும் பேருந்து நிலையத்தை அடைந்தது. இதில் காவலர்கள் மதுவிலக்கு மற்றும் மதுவிலக்கு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.
தகவல் : GETLOKALAPP
