Home Uncategorizedகோவையில் உயர் ரக போதைப்பொருள் பறிமுதல்… 7 பேர் கைது!

கோவையில் உயர் ரக போதைப்பொருள் பறிமுதல்… 7 பேர் கைது!

by bait
0 comments

கோவையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதைப்பொருள் மெத்தபெட்டமைன் மற்றும் 20 LSD ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துணை ஆணையர் தேவநாதன் தெரிவித்தார்

கோவை மாநகர காவல் துணை ஆணையர் தேவநாதன், கல்லூரி மாணவர்கள், தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் இளைஞர்களிடையே போதைப் பொருட்கள் பயன்பாட்டை பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்து வருவதாக கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் தேவநாதன் கூறியதாவது:
கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 50 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலிருந்து, குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து மாணவர்கள் இங்கு வந்து பயின்று வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல் தெரிய வந்ததால், கோவை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்கள் எங்கிருந்து வருகிறது என விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

சமீபத்தில், கல்லூரி மாணவர்கள் இடையே மெத்தபெட்டமைன் (சிந்தடிக் டிரக்) மற்றும் LSD போன்ற போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருக்கும் தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து கோவைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு, இதனை இங்கு இருக்கும் ஐடி இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வந்தது உறுதியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மிதுன்ராஜ் (27) என்பவர் கடந்த 27ம் தேதி கோவை செட்டிபாளையம் பகுதியில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 50,000 மதிப்புள்ள 7 கிராம் மெத்தபெட்டமைன், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர், பெங்களூரில் போதைப் பொருட்களை வாங்கி, கோவையில் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

மேலும் தொடர் விசாரணைகளில், ஜெகநாதன் மற்றும் கோகுல் என்ற மற்ற நபர்களும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 28-ஆம் தேதி ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, 45,000 மதிப்புள்ள 6 கிராம் மெத்தபெட்டமைன், மற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின், 2-ஆம் தேதி கோகுல் கைது செய்யப்பட்டு, 30,000 மதிப்புள்ள 4 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

banner

மேலும், 3ம் தேதி, கேரளா மாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 4 லட்சம் மதிப்புள்ள 53 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 20 LSD ஸ்டாம்ப் சிந்தடிக் டிரக் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, பேபே, கூகுள்பே மூலம் போதைப் பொருட்களை வாங்கி, விற்பனை செய்தது தெரிய வந்தது.

இவ்வழக்கில், மொத்தமாக 6 லட்சம் மதிப்புள்ள 69 கிராம் மெத்தபெட்டமைன், 20 LSD ஸ்டாம்ப், இரண்டு கார்கள், 1 இருசக்கர வாகனம், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களின் குறித்த விசாரணை நடந்து வருகிறது என கூறினார்..

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment