Home Uncategorizedடாஸ்மாக் , கனிமவளக் கொள்ளை வழக்கு.. ED அதிகாரிகள் திடீர் பணியிடை மாற்றம்.. காரணம் என்ன?

டாஸ்மாக் , கனிமவளக் கொள்ளை வழக்கு.. ED அதிகாரிகள் திடீர் பணியிடை மாற்றம்.. காரணம் என்ன?

by bait
0 comments

டாஸ்மாக் வழக்கு, கனிமவளக் கொள்ளை வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறையின் 2 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக கூறி கடந்த மார்ச் மாதம் அமலக்காதுறை அதிகாரிகள் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட ஏழு முக்கிய இடங்களில் முன்று நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாகவும், சுமார் ரூ1000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக அமலாக்கதுறை பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தது. இதற்கு அப்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்து இருந்தார்.

டாஸ்மாக்வழக்கு, கனிமவளக்கொள்ளைவழக்கு

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதனுடன் தொடர்புடைய சென்னை நகரில் பல சுமார் 11 இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்றன. இதில் குறிப்பாக மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் விசாகன் வீட்டில் அருகில் டாஸ்மாக் ஒப்பந்தம் தொழிலதிபர் ரத்திஷ் தொடர்பாக பேசப்பட்ட வாட்ஸ் ஆப் உரையால் கொண்ட நகல்கள் கிழிந்த நிலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விசாகனுக்கு தொடர்புடைய திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, சூளைமேடு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் அமலாக்கத்துறை அதிகாரி டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை அழைத்து சென்று சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது.

அமலாக்கத்துறையின்2 அதிகாரிகள்பணியிடமாற்றம்

banner

இதனை தொடர்ந்து தொழிலதிபர் ரத்திஷ் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட வீடுகளில் சோதனை நடத்தினர், இந்த சோதனையின் போது இருவரும் இல்லாததால் வெளிநாடு தப்பி சென்றுள்ளனரா என்ற கோணத்தில் அமலாக்கதுறை அதிகாரிகள் அவர்களின் பயண விவரத்தை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் முறைகேடு வழக்குகள் மட்டுமின்றி கோவை ,விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்களில், அரசு புறம்போக்கு நிலங்கள், நீரோடைகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்களில் இருந்து, செம்மண் சட்டவிரோதமாக லாரிகளில் ஏற்றி, அதிக அளவில் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பான வழக்கில் முக்கிய அதிகாரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு வழக்குகளையும் சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த நிலையில் தற்போது வருமான வரித்துறை பணிக்கு மாற்றப்பட்டனர்

இணைஇயக்குநர்பியூஸ்குமார்யாதவ்

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய வீடுகளில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை ஈடுப்பட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக கூறி கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையில் ஈடுப்பட்டவர் இணை இயக்குநர் பியூஸ் குமார் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment