Home Uncategorizedசிதம்பரம் அருகே கைப்பற்றப்பட்ட கஞ்சா – கல்லூரி மாணவர்கள் சிக்கினர்

சிதம்பரம் அருகே கைப்பற்றப்பட்ட கஞ்சா – கல்லூரி மாணவர்கள் சிக்கினர்

by bait
0 comments

அண்ணாமலை நகரில் பொறியியல் மற்றும் மருத்துவம் பயிலும் கல்லூரி மாணவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்து அண்ணாமலை நகர் பகுதி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு காவல் துறை சார்பில் போதை பொருள் பயன்பாட்டை தடுக்க ஏராளமான அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கடலூர் மாவட்டத்திலும் எஸ்பி உத்தரவின் பேரில் காவல் துறையினர் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிரமாக கண்காணிப்பு பணியிலும், வாகன தணிக்கையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அண்ணாமலை நகர் காவல் துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் முருகன் மற்றும் காவல் துறையினர் அண்ணாமலை நகர் அருகே உள்ள சிவகாமி நகர் பகுதியில் இருந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நான்கு பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். அவர்களைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அவர்கள் சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களான வாணியம்பாடி பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் (24), சென்னை அடையார் பகுதியைச் சேர்ந்த ஹபீஸ் (23), கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராகுல் (25) என்பது தெரியவந்தது.

மேலும் ஒரு மாணவர் சிதம்பரம் எம்கே தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (22), இவர் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஆவார்.

அவர்கள் நான்கு பேரையும் சோதனை செய்தலில் அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் சுமார் ஆறு கிலோ கஞ்சா இருந்ததாக தகவல் தெரிய வந்துள்ளது.

அவர்களிடமிருந்து காவல் துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நால்வரையும் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு வந்து மாணவர்கள் நான்கு பேரிடமும் விசாரணை மேற்கொண்டார். அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கஞ்சா வழக்கில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் அண்ணாமலை நகரில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் கஞ்சா வைத்திருந்த காரணத்திற்காக காவல் துறையினர் அவர்களை கைது செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் : TAMILSAMAYAM

banner

You may also like

Leave a Comment