Home Uncategorizedஸ்ரீ வில்லிபுத்தூரில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்… நான்கு பேர் கைது!

ஸ்ரீ வில்லிபுத்தூரில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்… நான்கு பேர் கைது!

by bait
0 comments

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆறு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்களில் இருந்து இளைஞர்கள், பெரியவர்கள் வரை கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர சோதனை

கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து தனிப் படைகள் அமைத்து தீவிர சோதனைகள், ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரகசிய கண்காணிப்பின் மூலம் விசாரணை

ஸ்ரீ வில்லிபுத்தூர் சீனியாபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில் காவல்துறையினர் அப்பகுதிகளில் ரகசிய கண்காணிப்பின் மூலம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கஞ்சா விற்பனை

இந்நிலையில் ஒரே கூட்டாளிகளான அசோக்நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், கம்மாபட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரசுதன், ரங்கநாதபுரம் பகுதி சேர்ந்த போத்திராஜ், கண்ணன் காலனியை சேர்ந்த சரவணகுமார் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தெரியவந்தது

நான்குஇளைஞர்கள்கைது

இவர்களை பின் தொடர்ந்த காவல்துறையினர் நால்வரையும் மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் இவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா, 1700 ரூபாய் பணம், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நான்கு இளைஞர்களையும் கைது செய்தனர்.

தொடர்விசாரணை

இவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில் கம்மாபட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் கரூரில் வசித்து வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.

banner

சிறையில் அடைப்பு

அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப் படைகள் அமைத்து கரூர் விரைந்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறையினர் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்தனர். 25 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment