Home Uncategorizedநாகையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்: திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கைது!

நாகையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்: திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கைது!

by bait
0 comments

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 300 கிலோ கஞ்சா மற்றும் ஒரு சொகுசு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல். இதன் இந்திய மதிப்பு சுமார் 60 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கஞ்சா கடத்தல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று தனிப்படை அதிரடி சோதனை நடத்தினர்.

6 பேர் கைது

வேதாரண்யம் அருகே உள்ள குரவபுலம் ரயில்வே கேட்டு அருகில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அகஸ்தியன்பள்ளியைச் சேர்ந்த ரவி, கோடியக்காட்டைசேர்ந்த திமுக பிரமுகருமான லட்சுமணன், தேத்தாகுடி தெற்கு பகுதி சேர்ந்த ரவி மற்றும் வேதமணி, பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த குமார், மதுரையைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் ஆகியோரை நாகை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

300 கிலோ கஞ்சா பறிமுதல்

அவரிடமிருந்து 300 கிலோ கஞ்சா மற்றும் சுமோ கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த கஞ்சாவானது இந்திய கடற்கரை எல்லையான கோடியக்கரை, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, மணியின் தீவு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது என்பது தெரிய வந்துள்ளது.

60 லட்சம்

இதனுடைய இந்திய மதிப்பு சுமார் 60 லட்சம் என கூறப்படுகிறது. அன்னிய மதிப்பு சுமார் ஆறு கோடி இருக்கலாம் என தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஹர்ஷ் சிங், வேதாரண்யம் டிஎஸ்பி சுபாஷ் சந்திர போஸ், காவல் ஆய்வாளர்கள் மற்றும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.

banner

நாகை சிறையில் அடைப்பு

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்களை வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகை சிறையில் அடைத்தனர். வேதாரண்யம் பகுதியில் கஞ்சா கடத்தல் என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment