Home Uncategorizedகல்லூரி மாணவரிடம் கஞ்சா பறிமுதல்… கோவையில் அதிர்ச்சி!

கல்லூரி மாணவரிடம் கஞ்சா பறிமுதல்… கோவையில் அதிர்ச்சி!

by bait
0 comments

கோவை மதுக்கரையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவரிடம் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்ட சுற்று பகுதியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் கடந்த வாரம் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சிறப்பு தனிப்படை காவல் துறை
கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள், அடிக்கடி செல்லும் இடங்களில் சிறப்பு தனிப்படை காவல் துறை சோதனை மேற்கொண்டனர். இதில் 6 கிலோ கஞ்சா, 4 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள், 42 திருடப்பட்ட டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. செட்டிபாளையம், நீலாம்பூர், சூலூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது

தங்கும் விடுதியில் சோதனை
இதில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரி மாணவர்கள், கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் அல்லாத நபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் கஞ்சா மற்றும் குற்ற செயலில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

banner


போதைப் பொருள்
போதைப் பொருள் பயன்பாடு, குற்றப் பின்னணி உள்ள நபர்களுடன் நட்பு, கல்லூரிகளில் குழு அமைத்து ரவுடிசத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் தெரிவித்து இருந்தார். மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


கஞ்சாவிற்பனை
இதன் தொடர்சியாக தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தடாகம் காவல்துறையினர் தடாகம் கணுவாய் பகுதியிலுள்ள கோழிப்பண்ணை சந்திப்பு அருகே சோதனையில் ஈடுபட்டனர்கல்லூரி மாணவர் கைது
அப்போது மதுக்கரையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த ராகுல் என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த 2.5 கிலோ கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்யப்பட்டது. தடாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

கோவை மாவட்ட காவல்துறை
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களின் விவரங்களையும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் மற்ற நபர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு இதுபோன்ற கல்லூரி மாணவர்களுக்கு இடையான கஞ்சா போதைப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவை மாவட்ட காவல்துறை செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment