Home Uncategorizedஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்பனை செய்த மாணவர்கள் கைது!

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்பனை செய்த மாணவர்கள் கைது!

by bait
0 comments

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்கலையில் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆந்திரா, பீகாரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 550 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கஞ்சா மற்றும் சட்ட விரோத போதை பொருட்கள் பயன்பாட்டை குறைக்க காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்து இருப்பது சில செய்திகளின் வாயிலாக தெரிய வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக ஆந்திரா, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தெரிகிறது. இந்த தகவலை அடுத்து மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு காவல் துறை, தனிப்படை காவல் துறை ஆகியோர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் இரு மாணவர்களிடம் கஞ்சா இருந்ததால் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிருஷ்ணன் கோவில் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்த ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ விக்ரம் ஆதித்யா (வயது 20), பீகார் மாநிலம் ஆரோரியா மாவட்டத்தைச் சேர்ந்த ரோகித்குமார் (வயது 21) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த மாணவர்களின் பொட்டலங்களாக இருந்த 500 கி. கஞ்சா, எடை இயந்திரம், இரு செல்போன்கள் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில்: கல்வி நிலையங்களில் போதை பொருள் விற்பனை தடுப்பு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

banner

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா பழக்கம் அதிகரித்து உள்ளதாக தகவல் வந்தது. இது குறித்து விசாரித்த போது, வட மாநிலங்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் அங்கிருந்து கஞ்சா கொண்டு வந்து, இங்குள்ள மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதில் இரு மாணவர்களை தற்போது கைது செய்து இருக்கிறோம். இவர்கள் இருவரும் கலசலிங்கம் பல்கலைகழகத்தில் நான்காம் ஆண்டு பி.டெக் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்காமல், தனியாக வீடு எடுத்து தங்கி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்து உள்ளதாக போலீசார் கூறினர்.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment