Home Uncategorizedதிருச்சி மணப்பாறை காவல் நிலையத்திற்கு வந்த குடிமகள்; சிறைக்கு அனுப்பிய போலீசார்!

திருச்சி மணப்பாறை காவல் நிலையத்திற்கு வந்த குடிமகள்; சிறைக்கு அனுப்பிய போலீசார்!

by bait
0 comments

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சூர்யா தேவி என்பவர் சோசியல் மீடியாக்களில் வீடியோக்களை பதிவு செய்து தனக்கென விளம்பரத்தை ஏற்படுத்திக் கொள்பவர். இந்நிலையில் அவருடைய கணவர் மற்றும் சகோதரர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவர் மீது கிருத்திகா என்பவர் புகார்

அளித்தார். மேலும் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது அந்த விசாரணையை ஏற்க மறுத்து மது போதையில் காவல் நிலையத்திற்கு சூர்யா தேவி வருகை புரிந்தார். மேலும் அவர் பெட்ரோலை ஊற்றி தீக்குளிப்பது போல் நாடகமாடி போலீசாரை தகாத வார்த்தையால் திட்டியதால் தற்போது சிறையில் உள்ளார்.

சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர் சூர்யாதேவி


திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் வசித்து வருபவர் சூர்யாதேவி. இவர் சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், டிக்டாக் பிரபலங்களை திட்டி அதனை சோசியல் மீடியாக்களில் வீடியோவாக வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வது இவரது வழக்கமாக கொண்டுள்ளார்.

banner

சகோதரன் மற்றும் கணவர் மீது புகார்
இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மணப்பாறை காவல் நிலையத்தில் தனது கணவன் மருதுபாண்டி, தனது சகோதரர் தேவா ஆகியோர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக புகார் அளித்திருந்தார். மேலும் அதேபோல் சூர்யாதேவி மீது தேவாவின் மனைவி கீர்த்திகா என்பவரும் புகார் அளித்திருந்தார்.

மதுபோதையில்காவல்நிலையத்திற்குவந்தசூர்யாதேவி
மேலும் நேற்று இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சூர்யாதேவி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது புகாரில் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிமதுபோதையில் காவல்நிலையத்திற்கு சூர்யாதேவி வந்திருந்தார்.

பெட்ரோலைஊற்றிதீக்குளிக்கமுயல்வதுபோல்நாடகம்
அப்போது அவர் அங்கிருந்த போலீசாரை தகாதவார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமின்றி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து காவல்நிலையம் முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயல்வது போல் நாடகமாடினார். அப்போது அங்கிருந்த போலீசார் பெட்ரோல் கேனை பிடுங்கியதுடன் அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.

திருச்சி மகளிர் சிறையில் அடைப்பு
மேலும் இதுகுறித்து தலைமைக்காவலர் லாரன்ஸ் அளித்த புகாரில் அரசுப்பணியை செய்யவிடாமல் தடுத்து தகாதவார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக சூர்யாதேவி மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். அதனை பிறகு சூர்யாதேவி மணப்பாறை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அடுத்த மாதம் 6ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment