சன் டிவியில் ஒளிப்பரப்பாக்கி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா.
சன் டிவியில் பிரபலமான சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது ‘எதிர்நீச்சல்’. ப்ரைம் டைமில் டெலிகாஸ்ட் ஆகி வரும் இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜனனி என்ற ரோலில் நடித்து வருகிறார் மதுமிதா என்பவர். இவர் சாலை விபத்தில் சிக்கியதாக தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் கடும் சர்ச்சைகளை கிளப்பி இருந்தது. இந்நிலையில் ‘எதிர்நீச்சல்’ மதுமிதா விபத்து குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரையில் பிரபலமான தொடராக சன் டிவியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் மதுமிதா. இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட இவரை மையமாக வைத்து தான் கதை நகர்ந்து வருகிறது. அத்துடன் சீரியலின் விளம்பரங்களிலும் மதுமிதாவின் புகைப்படம் தான் இடம்பெற்று வருகிறது.

கனவே கன்னட சீரியலில் நடித்தார். இதனையடுத்து எதிர்நீச்சல் தொடர் மூலமாக தமிழில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அடிக்கடி இந்த தொடரின் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து சக நடிகர்களுடன் ரீல்ஸ் மற்றும் போட்டோக்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஆக்டிவாக வலம் வருகிறார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து நடிகை மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘நண்பர்களே சமீபத்தில் என்னை பற்றி ஒரு வதந்தியான தகவல் பரவி வருகிறது. அதில் எதுவும் உண்மை கிடையாது. நான் நலமாக இருக்கிறேன். தவறான தகவல்களை நம்ப வேண்டாம்’. அந்த காவல்துறை அதிகாரியும் நலமாக உள்ளார். மது அருந்திவிட்டு நாங்கள் வாகனம் ஓட்டவில்லை என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் மதுமிதா.
தகவல் : TAMILSAMAYAM
