மதுரவாயலில் மதுபோதையில் மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த இளைஞர், கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் சென்னை மதுரவாயலில் உள்ள உணவகத்தில் சர்வராக வேலை செய்து வந்தார். மேலும், தனது நண்பர்களுடன் ஸ்ரிலட்சுமி நகர் காந்தி தெருவில் தனியாக அறை எடுத்து வசித்து வந்தார்.