22 கிலோ விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் பகுதியில் விற்பனை செய்வதற்காக சுமார் 22 கிலோ (மதிப்பு ரூ.2,20,000/-) கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.1,25,000/- அபராதம் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்த விபரம் வருமாறு, ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் அருகில் சந்தேகந்திற்கிடமான வகையில் கடந்த 14.09.2023-தேதி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் வைத்திருந்த வெள்ளை நிற பையை சந்தேகத்தின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் சோதனை செய்தபோது, அதில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் இருவரையும் பிடித்து தீவிர விசாரணை செய்தபோது, அவர்கள் தங்கி இருந்த தனியார் விடுதியில் உள்ள அறையில் மேலும் 20 கிலோ கஞ்சா பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தின்பேரில், மொத்தம் 22கிலோ (மதிப்பு ரூ.2,20,000/-) கஞ்சாவையும் ஸ்ரீரங்கம் போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் கஞ்சா வைத்திருந்த சீனிவாச ரெத்தினம் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்து, திருச்சி மாநகர மதுவிலக்கு அமல்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தகவல் : INDIANEXPRESS
