1
வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சலவன்பேட்டை பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று (டிச.24) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்ற போலீசார், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கோதாவரி (47) என்பவரை அவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தபோது கையும் களவுமாக பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் : GETLOKALAPP