காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளாகுளம் சுடுகாடு அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சிவகாஞ்சி போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், சரவணன் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.