Home Uncategorizedவெள்ளகோவில் அருகே பயங்கரம்! குடிபோதையில் பெயிண்டர் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை..!

வெள்ளகோவில் அருகே பயங்கரம்! குடிபோதையில் பெயிண்டர் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை..!

by bait
0 comments

வெள்ளகோவில் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளகோவில்அருகேகுடிபோதையில்தகராறு:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவில் கே.வி.பழனிசாமி நகரில் வீடு வாடக்கை எடுத்து பெயிண்ட் அடிக்கும் தொழிலாளர்கள் தங்கி வேலைசெய்து வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த வீட்டில் குடியிருந்த மோகன்ராஜ் (32) என்பவர் கொலை செய்தும், சதாம் உசேன் (26) படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக சதாம் உசேனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.பெயிண்டர் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை:

வெள்ளகோவில் கரூர் ரோடு கே.வி.பழனிச்சாமி நகரில் விஜய நிர்மலா (44) என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து கொண்டு பெயிண்டிங் வேலை செய்து வருபவர்கள் 1.மோகன்ராஜ் (32) , 2. சதாம் உசேன் (26), 3. அருண் ( பரமத்தி வேலூர் கரூர்), 4. அக்பர் (வாவிபாளையம் திருப்பூர்) ஆகிய நான்கு பேரும் வெள்ளகோவில் பழனிச்சாமி நகரை சேர்ந்த முரளிதரன் (44) என்பவருடன் கடந்த 2 வாரமாக பெயிண்டிங் வேலை செய்து இந்த வீட்டில் குடியிருந்து வருகிறார்கள். நேற்று இரவு 8 மணியளவில் மேற்படி ரூமில் தங்கியிருந்த அக்பர் என்பவர் குடிபோதையில் தங்களுக்குள் சண்டை வந்துவிட்டதாக ஓனர் முரளிதரனுக்கு போன் செய்து தெரிவித்ததாகவும், அதற்கு அக்பர் இரவு நேரத்தில் அமைதியாக இருங்கள் நான் கோவையில் இருக்கிறேன். எனவே நான் வெள்ளகோவில் வந்ததும் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை மேற்படி நால்வரையும் வேலைக்கு கூப்பிடுவதற்காக முரளி மேற்கண்ட நான்கு பேருக்கும் போன் செய்தபோது யாருமே எடுக்காததால் நேரில் வந்து பார்த்தபோது அவர்கள் தங்கியிருந்த அறையில் மோகன்ராஜ் என்பவர் தலைப்பகுதியில் கல்லை போட்டு பலத்த இரத்தக்காயத்துடன் இறந்துகிடந்ததாகவும், சதாம் உசேனுக்கு முகம், தலை, கை, கால்களில் இரத்தம் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த தாகவும், மேலும் இவர்கள் தங்கியிருந்த அறையில் மதுபாட்டில்கள் உடைந்து கிடந்ததுடன் அந்த பாட்டில்களிலும் தாக்கியுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

தகவல் : TAMILSAMAYAM

banner

You may also like

Leave a Comment