
ரயில்களில் பயணிப்பவர்கள் மது அருந்திவிட்டு பயணம் செய்யலாமா அல்லது மதுவை ரயிலில் கொண்டு செல்லலாமா என்ற சந்தேகம் நிறையப் பேருக்கு இருக்கும். அதுபற்றிய விதிமுறை இதுதான்.
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களும் சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வருவபர்களும் ஏராளம். இதுமட்டுமல்லால், பள்ளி – கல்லூரிகளுக்குச் செல்பவர்கள், வேலை நிமித்தமாக செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள் என ரயில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகம்.
ரயில்களை பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு முக்கியக் காரணம், உடல் அசதி இல்லாமல் சௌகரியமாகப் பயணிக்கலாம் என்பதாகும். அதோடு, மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும். அதேபோல, பேருந்து – விமானம் போன்றவற்றை விட ரயில்களில் டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவு. இதற்காகவே தட்கல் டிக்கெட் எடுத்தாவது ரயிலில் செல்ல வேண்டும் என்று நிறையப் பேர் முயற்சிப்பார்கள்.
ரூல்ஸ் முக்கியம்!

ரயில்களில் பயணம் செய்பவர்கள் முதலில் ரயில்வே தொடர்பான விதிமுறைகள் பற்றிக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். சில விதிமுறைகள் பயணிகளுக்கு சலுகை வழங்குவதாக இருக்கும். சில விதிமுறைகள் ரயில் பயணிகளுக்கு அபராதம், தண்டனை போன்றவை தொடர்பானதாக இருக்கும். எனவே ரயில்களில் பயணம் செய்யும் போது முக்கியமான விதிமுறைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
மது அருந்திவிட்டு செல்லலாமா?
ரயில்களில் பயணிப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. நீங்களும் ரயில்களில் அடிக்கடி பயணம் செய்பராக இருந்தால், ரயில்வே தொடர்பான விதிகளை பின்பற்ற வேண்டும். சில பயணிகள் மது அருந்திவிட்டு ரயிலில் பயணிப்பது, அல்லது சில சமயம் பயணிகள் ரயிலில் மதுவை கொண்டு வருவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே ரயிலில் மதுபானங்களை எடுத்துச் செல்வதற்கான விதிமுறைகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
ரயில்களில் பயணிப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. நீங்களும் ரயில்களில் அடிக்கடி பயணம் செய்பராக இருந்தால், ரயில்வே தொடர்பான விதிகளை பின்பற்ற வேண்டும். சில பயணிகள் மது அருந்திவிட்டு ரயிலில் பயணிப்பது, அல்லது சில சமயம் பயணிகள் ரயிலில் மதுவை கொண்டு வருவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே ரயிலில் மதுபானங்களை எடுத்துச் செல்வதற்கான விதிமுறைகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
500 ரூபாய் அபராதம்!

மது அருந்திவிட்டு பயணம் செய்பவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் 1989 பிரிவு 165ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர, ரயிலில் வேறு ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்களை யாராவது வைத்திருந்தால் அவருக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அதேபோல, இந்தப் பொருளால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அந்த நபர் அந்தற்கு ஈடுசெய்ய வேண்டும்.
கடும் நடவடிக்கை!

பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் மது போதையில் பிடிபட்டால் பெரும் சட்ட சிக்கலில் சிக்க நேரிடும். அதுமட்டுமின்றி, மது பாட்டில்கள் திறக்கப்பட்டிருந்தால் ரயில்வே துறை அவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். இது தவிர, ரயில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்லும்போது பிடிபட்டால் அவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள். அதன் பிறகு அந்த மாநில கலால் துறை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தகவல் : TAMILSAMAYAM
