இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். அதற்குக் காரணம் ரயில்களில் டிக்கெட் செலவு மிகவும் குறைவு. அதேபோல, வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். ரயில் பயணிகளுக்கு நிறைய வசதிகளும் இருக்கின்றன. ஆனால் நிறையப் பேர் ரயில்களில் உள்ள வதிகளையும் ரயில்வே விதிமுறைகளையும் தவறாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, ரயில்வே தொடர்பான விதிமுறைகள் என்ன என்பதையும், அது தொடர்பான அப்டேட்களையும் ரயில் பயணிகள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ரயில் பயணிகளுக்கான ஒரு முக்கியமான விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. ரயில்களில் மதுபானம் எடுத்துச் செல்வது குறித்து சமீபத்தில் சில முக்கிய விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே சட்டம் 1989-ன் படி, மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் பொருட்களையோ அல்லது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தப் பொருளையும் பயணிகள் எடுத்துச் செல்ல முடியாது. இந்த விதிமுறை மதுபானத்திற்கும் பொருந்தும்.

தகவல் : TAMILSAMAYAM