மயிலாடுதுறையில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை களைகட்டி வருகிறது. மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அங்கு சட்ட விரோதமாக மதுபான விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை டிஎஸ்பி சஸ்பெண்ட்
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசன் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சட்ட விரோதமாக காவல்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு தகவல்களை உயரதிகாரிகளின் அனுமதியில்லாமல், ஊடகங்களில் கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதே சமயம் அமைச்சரின் பந்தோ பஸ்துக்கு டிஎஸ்பி சுந்தரேசனின் அதிகாரப்பூர்வ வாகனம் பறிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிரடி காரணமாக அவர் தனது வீட்டிலிருந்து தினமும் அலுவலகத்திற்கு கால்நடையாகவே சென்று வந்ததாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இதனை மறுத்த டிஎஸ்பி சுந்தரேசன், அமைச்சரின் பந்தோபஸ்துக்கு தனது கார் செல்லவில்லை என்று விளக்கம் அளித்தார்.
காவல்துறைவட்டாரங்களில்பரபரப்பு
அதே சமயம் உயர் அதிகாரிகள் தனக்கு அழுத்தம் கொடுப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டிய அவர், தனது பணி காலத்தில் நேர்மையாக செயல்பட்டு வருவதாகவும். தன் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட கிடையாது என்றும் ஆணித்தரமாக கூறினார். மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி பொதுவெளியில் வந்து உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டை முன் வைத்தது காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில், மயிலாடுதுறையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்ற வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சட்டவிரோத மது விற்பனை
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு காவிரி கரையோர பகுதியில் ஒரு சிலர் மது பெட்டிகளை மொத்தமாக வாங்கி, சில்லறையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
தகவல் : TAMILSAMAYAM
