மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவரை கடப்பாரையில் அடித்து கொலை செய்த மனைவி நத்தம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம்,கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(40) வெளிமாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஓட்டி வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி பாண்டீஸ்வரி(33) என்ற மனைவியும், 4 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் 24 மணி நேரமும் மது போதையில் இருந்ததாகவும், இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

தகவல் : DINAMANI
