Home Uncategorizedமது பிரியர்களுக்கு வந்த கெட்ட செய்தி.. மதுபானங்கள் விலை திடீர் உயர்வு!

மது பிரியர்களுக்கு வந்த கெட்ட செய்தி.. மதுபானங்கள் விலை திடீர் உயர்வு!

by bait
0 comments

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளன. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் இன்று மதுபானங்கள் விலை உயர்ந்ததால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் புதிய கலால் கொள்கையும் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக பீர் , உள்நாட்டு மதுபானங்கள் மற்றும் ஆங்கில மதுபானங்கள் ஆகிய மூன்று வகைகளின் விலையும் உயர்ந்துள்ளது.

உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் மதுபானங்களுக்கான புதிய விலையை அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. இதுகுறித்து மதுபான ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. புதிய கலால் கொள்கை ஜனவரி 29 அன்று அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய கலால் கொள்கையின்படி, நாட்டில் மதுபான உரிமக் கட்டணம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கலால் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் மதுபானம் மற்றும் பீர் விலை உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் நாட்டு மதுபானம் 5 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன் விலை ரூ.65க்கு பதிலாக ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. ஆங்கில மதுபானத்தின் குவார்டர் விலை 15 முதல் 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அரை மற்றும் முழு பாட்டில்களின் விலையும் உயர்ந்துள்ளது. பீர் கேன் விலை 10 ரூபாய் அதிகரித்துள்ளது. பாட்டில் விலை ரூ. 20 அதிகரித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்திலும் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது. பாட்டில், கேன் ஆகியவற்றின் விலை ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது. புதிய கலால் கொள்கையை அமல்படுத்தும் போது அம்மாநில அரசு, முந்தைய அரசு விதித்த அனைத்து செஸ் வரிகளையும் நீக்கியுள்ளது. கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளன.

banner

மத்தியப் பிரதேசத்தில் மதுபானங்களின் விலை ரூ.150 முதல் ரூ.200 வரை அதிகரித்துள்ளது. புதிய கலால் வரிக் கொள்கை அமலுக்கு வந்தவுடன் பீர் மற்றும் மதுபானங்களின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளன. புதிய நிதியாண்டில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் என்று அம்மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment