Home Uncategorizedபோலீசாருக்கு சந்தேகம் வராத வகையில் நூதனமாக கஞ்சா விற்பனை – தூத்துக்குடியில் இருவர் கைது

போலீசாருக்கு சந்தேகம் வராத வகையில் நூதனமாக கஞ்சா விற்பனை – தூத்துக்குடியில் இருவர் கைது

by bait
0 comments

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்த கும்பலை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை அதிகமாகி வருகிறது. அதனை தடுப்பதற்கு தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் எல்லா அதிகாரங்களையும் கொடுத்துள்ளார். அவரது அறிவுறுத்தலின் படியே தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக ஒலிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரடியாக பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

மேலும் இரவு நேரங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் தினமும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் தூத்துக்குடி கே டி சி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலை அடுத்து அங்கு சென்று ஆய்வு செய்த காவல்துறையினர் அப்பகுதியை சேர்ந்த ஞானராஜ் மற்றும் குமரன் நகர் பகுதியில் சேர்ந்த இசக்கி ராஜா என்ற இருவரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் விசாரணை செய்ததில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

அதில் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவர்களை ஆய்வு செய்து பார்த்தபோது அவர்கள் இருவரிடமும் கஞ்சா இருப்பது தெரியவந்தது. தற்போது அவர்கள் காரில் வைத்து செல்போன்கள் மூலம் தொடர்பு கொண்டு கஞ்சா விற்பனை செய்தது அம்பலமானது.

அதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து சுமார் ஒன்றே கால் கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட நான்கு செல்போன்கள், சுமார் 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் அவர்கள் கஞ்சா விற்க பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் துறையினரின் கெடுபுடியில் இருந்து தப்பிப்பதற்காக கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த இருவர் நூதன முறையில் காரில் வைத்து செல்போன் மூலம் நபர்களை தொடர்பு கொண்டு கஞ்சா வியாபாரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment