Home Uncategorizedபோதை பொருட்களுடன் விடிய விடிய கொண்டாட்டம்: குமரி ரிசார்ட்டில் மனைவிகளை மாற்றி உல்லாசம்?.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

போதை பொருட்களுடன் விடிய விடிய கொண்டாட்டம்: குமரி ரிசார்ட்டில் மனைவிகளை மாற்றி உல்லாசம்?.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

by bait
0 comments

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ரிசார்ட்டில் உயர் ரக போதை பொருட்களுடன் விடிய விடிய நடந்த பிறந்தநாள் பார்ட்டியில் போதையின் மயக்கத்தில் இருந்தவர்கள் மனைவிகளை மாற்றி உல்லாசமாக இருந்த தகவல் போலீசார் விசாரணையில் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே தனியார் ரிசார்ட்டில் அரசால் தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள், வெளி நாட்டு மதுபானங்ளுடன் விடிய விடிய பிறந்தநாள் விழா கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வந்த ரகசிய தவலையடுத்து எஸ்பி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் நள்ளிரவில் ரிசார்ட்டை சுற்றி வளைத்துள்ளனர். தொடர்ந்து காலை வரை போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி உள்ளனர்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான குலசேகரம் பகுதியை சேர்ந்த கோகுல் கிருஷ்ணன் (34), அவரது மனைவி சவுமி (33), கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த விதுன் (30), கோகுல் கிருஷ்ணனின் சகோதரர் கோவிந்த் கிருஷ்ணா (27), கோவாவை சேர்ந்த ஜெயராஜ் சிங் கவுடா (35), பெங்களூருவை சேர்ந்த சையத் பர்ஷான் (35), வாலன்ஸ் பால் (36), ரிசார்ட் உரிமையாளர் ராஜூ (64) ஆகிய 8 பேரை கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் குமரியை சேர்ந்த விஐபிக்கள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்து இருக்கிறது. அது குறித்து போலீசார் ரகசியமாக தகவல்களை சேகரித்து வருகின்றனர். இது தவிர சிறையில் உள்ளவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போது கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்றும் போலீசார் நம்புகின்றனர்.

முக்கியமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், முன்னாள் எம்எல்ஏவின் பேரன்களுமான கோகுல் கிருஷ்ணன், கோவிந்த் கிருஷ்ணா, கோகுல் கிருஷ்ணனின் மனைவி சவுமி ஆகியோரிடம் கூடுதல் தகவல்களை கேட்டு பெற போலீசார் திட்டமிட்டு உள்ளனர். ஆகவே 8 பேரையும் காவலில் எடுக்கும் பணிகளை போலீசார் செய்து வருகின்றனர். இதனால் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், வெளிநாட்டு மது விற்பனை செய்தவர்கள், இவர்களுக்கு பின்னால் இருக்கும் விஐபிக்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையே தற்போது இது தொடர்பாக அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: குலசேகரத்தை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் பிரபல அரசியல் கட்சியின் பின்புலம் கொண்ட முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் பேரன் ஆவார்.

தகவல் : DINAKARAN

banner

You may also like

Leave a Comment