
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெம்பூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் சாலையில் நடந்து செல்லும் போதும், தண்ணீர் எடுக்க வரும் பொழுதும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது போதையில் பெண்கள் மீது டார்ச் லைட் அடிப்பதும் , பெண்களை கேலி செய்தும் வருவதாக மாசார்பட்டி காவல் நிலையத்துக்கும், விளாத்திகுளம் டிஎஸ்பி அலுவலகத்துக்கும் பொதுமக்கள் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஜூன் 4 ஆம் தேதி புதன்கிழமை இரவு மாசார்பட்டி போலீஸ் எஸ்.ஐ. முகேஷ் அரவிந்த் தனது புல்லட்டில் மற்றொரு காவலருடன் சேர்ந்து வெம்பூர் கிராமத்தில் ரவுண்ட்ஸ் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கோயில் அருகே பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த நான்கு இளைஞர்களை கூப்பிட்டு கண்டித்து வீட்டுக்குப் போக சொல்லி அறிவுரை கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்துள்ளனர். சற்று நேரம் கழித்து எஸ்.ஐ. முகேஷ் அரவிந்த் அந்தப் பகுதிக்கு மீண்டும் வந்தபோது, அங்கு அதே இடத்தில் மது போதையில் இருந்த அந்த இளைஞர்களை பார்த்து கோபமடைந்த எஸ்.ஐ. முகேஷ் அரவிந்த் போலீஸ் பாணியில் அவர்களை முறைப்படி கவனித்துள்ளார்.
தகவல் : NAKKHEERAN
