Home Uncategorizedபாண்டிச்சேரி ரயிலில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

பாண்டிச்சேரி ரயிலில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

by bait
0 comments

பாண்டிச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பயணியர் விரைவு ரயிலில் மதுபானம் கடத்திச் செல்வதாக, மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மங்களபிரியா தலைமையிலான போலீசார், மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு வந்த, பாண்டிச்சேரி ரயிலில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த விழுப்புரம் மாவட்டம், மலையரசன் குப்பத்தைச் சேர்ந்த வள்ளி (47), சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (50)  ஆகியோரை கைது செய்தனர்.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment