பழனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கோயிலுக்கு முருகனை தரிசனம் செய்வதற்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செய்கின்றனர். பக்தர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களும் அதிக அளவில் பழனியில் குவிக்கின்றனர்.
அப்படி பழனிக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை குறி வைத்து அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. அதனை சாக்காக வைத்துக் கொண்டு ரயில் நிலையம் சாலை, பேருந்து நிலையம், காந்தி ரோடு, உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பலர் மறைமுகமாக கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு அவ்வப்போது தகவல் கிடைத்த வண்ணம் இருந்துள்ளது. அந்தத் தகவலை அடுத்து காவல் துறையினர் முக்கிய பழனியில் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் பழனி பேருந்து நிலையம் பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்துள்ளார். அவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்ததில் அவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், இந்திரா நகர் பகுதியில் சேர்ந்த முகமது பீதா என்பது தெரியவந்தது. அந்த நபரை உடனடியாக காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். பழனி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பழனியில் பல்வேறு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் குவிவதால் மக்களோடு மக்களாக கலந்து சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு செய்தால் கஞ்சா விற்பவர்களை அடையாளம் காண முடியாது என்பதால் பழனியை மையமாக வைத்து கஞ்சா கைமாற்றும் குற்றங்கள் நடைபெற்று வருகிறது.
நகரில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கும் அதிகரிப்பதற்கும் கஞ்சா விற்பனை முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் பழனி கோயில் கும்பாபிஷேகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் எனத் தொடர் திருவிழாக்கள் நடைபெற உள்ளன. அப்போது பழனி அதிகமாக பக்தர் கூட்டம் படையெடுக்கும்.
இப்படி இருக்க கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிப்பதில் காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல பழனி வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை காவல் துறையினர் பாதுகாக்க வேண்டும் எனவும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் : TAMILSAMAYAM
