திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே பாண்டிச்சேரி கிராமத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை மீது மது போதையில் வழக்கறிஞர் ஓட்டிய கார் ஏறியதில், குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே உள்ளது பாண்டிச்சேரி கிராமம் . இந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை சந்தனமாரி தம்பதியரின் இரண்டு வயது குழந்தை சுதாக்ஷினி.
குழந்தை பலி
இந்த குழந்தை மாலை வேளையில் கிராமத்தின் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த சிறிய சாலையில் வந்த கார் குழந்தையின் மீது ஏறி இறங்கியதில் குழந்தை நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்து விட்டது.
மேலும் விபத்தை ஏற்படுத்திய நபர் நிற்காமல் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் நேரடியாக சரணடைந்தார்.
மருத்துவமனை
விபத்தில் உயிரிழந்த குழந்தையை மீட்டு உடனடியாக உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போதையில்வாகனம்இயக்கியவழக்கறிஞர்
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த விஜயநாராயணம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், விபத்தை ஏற்படுத்தியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயபால் என்பதும், மதுபோதையில் வாகனத்தை இயக்கியதும் தெரியவந்துள்ளது.
காவல்நிலையம்முற்றுகை
தொடர்ந்து காவல் நிலையத்தில் விபத்தை ஏற்படுத்தியவர் இருப்பதை அறிந்த பாண்டிச்சேரி கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். வழக்கு பதிவு செய்யாமல் விபத்தை ஏற்படுத்திய வழக்கறிஞரை வெளியே அனுப்பும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் பேச்சுவார்த்தை
சில மணி நேரங்கள் போராட்டம் நீடித்த நிலையில், காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மது போதையில் வாகனத்தை இயக்கி எவ்வித சலனமும் இன்றி விபத்தை ஏற்படுத்தி, இரண்டு வயது குழந்தையை உயிரிழந்திருப்பது கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் : TAMILSAMAYAM
