Home Uncategorizedநாமக்கலில்: மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் ஏலம்..

நாமக்கலில்: மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் ஏலம்..

by bait
0 comments

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பிடிபட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.

Lநாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்காக காவல் துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அந்த ரவுண்டு பணியின் போது மது பாட்டில்கள் கடத்தி கொண்டுவர இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது.

காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து கனரக வாகனங்களை பறிமுதல் செய்து வைத்திருந்தனர். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் மது பாட்டில்கள் கடத்தப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட இரண்டு கார்கள், ஒரு ஆட்டோ, இரண்டு லாரிகள் மற்றும் 24 2 சக்கர வாகனங்கள் மதுவிலக்கு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் இன்று நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் விடப்பட்டது. அதன்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் மதுவிலக்கு காவல் துறையினர் ஏலம் நடத்தினர்.

இந்த ஏலத்தில் கலந்து கொள்வோரிடம் 5 ஆயிரம் ரூபாய் முன் பணமாக பெறப்பட்டன. முன் பணம் செலுத்துவோர் மட்டும் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வாகனமாக ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் எடுக்கப்பட்ட வாகனத்தினை அதற்கான தொகையையுடன், சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தை பெற்றுக் கொண்டனர்.

பொது ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு தங்களுக்கு பிடித்த வாகனங்களை ஏலம் எடுத்தனர். அதன்படி 24 இருச்சக்கர வாகனங்கள் 3 லட்சத்து 74 ஆயிரத்து 976 ரூபாய்க்கும் 2 நான்கு சக்கர வாகனங்கள் 3 லட்சத்து 26 ஆயிரத்து 860 ரூபாய்க்கும் ஒரு ஆட்டோ 2 லட்சத்து 04 ஆயிரத்து 780 ரூபாய்க்கும் 2 லாரிகள் 8 லட்சத்து 27 ஆயிரத்து 180 ரூபாய்க்கும் என மொத்தம் 15 லட்சத்து 53 ஆயிரத்து 796 ரூபாய்க்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் கைப்பற்ற பட்ட வாகனங்கள் ஏலம் போனது.

தகவல் : TAMILSAMAYAM

banner

You may also like

Leave a Comment