மதுபாட்டில் வாங்கி வர இரண்டு ஆண் நண்பர்களை ஏற்பாடு செய்த இளம்பெண், லாட்ஜில் அறை எடுத்து தோழியை வரவழைத்துள்ளார்.

கைதானவர்
சென்னையில் தோழியின் ஆண் நண்பர்களுடன் லாட்ஜில் நடந்த மது விருந்தில் கலந்துகொண்ட இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தோழியும், அவரது ஆண் நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், சென்னையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அப்போது அவருக்கு 27 வயதான மற்றொரு இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. வார விடுமுறையில் சென்னை முழுக்க ஊர் சுற்றுவது, காபி கபே என வித விதமாக போட்டோ எடுத்து வசதியான பெண்களைப் போல காட்டிக் கொள்ள இன்ஸ்டாவில் போஸ்ட் போடுவது என ஜாலி கொண்டாடியுள்ளனர்.
மார்டன் உலகத்தில் மஞ்சப்பை எதற்கு? என்ற கொள்கையில் மூழ்கிய இளம்பெண் தனது தோழியையும் தனது கொள்கையில் சேர்த்துக் கொண்டு லூட்டி அடித்துள்ளார். ஆண் நண்பர்களுடன் அட்டி போட்டு லூட்டி அடிப்பது, அசந்தால் எல்லை மீறுவது என அருவருக்கத்தக்கச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
தகவல் : NEWS18TAMIL
