விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள எக்கியர்குப்பத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை வரை…

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள எக்கியர்குப்பத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை வரை 12 பேர் உயிரிழந்திருந்த நிலையில், ராஜவேலு என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மேலும் பலர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் : NEWS7TAMIL