Home Uncategorizedதேனியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது… போலீஸ் அதிரடி!

தேனியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது… போலீஸ் அதிரடி!

by bait
0 comments

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்தது. தகவலின் தொடர்ந்து பெரியகுளம் வடகரை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

போதைப் பொருள்

இந்நிலையில் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த வாசுதேவன் (43) என்பவரை பிடித்து விசாரணை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து அவரிடம் இருந்து1 1/2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கஞ்சாபறிமுதல்

அதே போன்று எண்டபுளி ஊராட்சிக்கு உட்பட்ட நேரு நகர், முருகமலை சாலையில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த அழகர் (41) என்பவரிடம் விசாரணை செய்த போது அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணை

அதனைத் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை கைது செய்து பெரியகுளம் வடகரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment