Home Uncategorizedதென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே கஞ்சா கடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே கஞ்சா கடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

by bait
0 comments

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே கஞ்சா கடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை பரவலாக நடப்பதாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அவர்களின் தனிப்பிரிவு காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.


இதனையடுத்து புளியங்குடி டி.எஸ்.பியின் தனிப்படையும் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்தனர். இதனை கண்டு சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய அந்த இரு சக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் கஞ்சா இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பைக்கில் கடத்தி வரப்பட்ட 2.2 கிலோ மதிக்கத்தக்க கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

banner

இவருடன் வந்த மேலும் இருவர் காவல்துறையினரை கண்டவுடன் தப்பி ஓடினர். பிடிபட்ட இளைஞரிடம் தனிப்பிரிவினர் நடத்திய விசாரணையில், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த தனுஷ் குமார் (22) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து புளியங்குடியை சேர்ந்த மணிகண்டன் (எ) மாட்டு ரவி, உள்ளாறு சேர்ந்த கார்த்தி (எ) காசிதுரை ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கடத்தி வரப்பட்ட 2.2 கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பல்சர் பைக்கையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தனுஷ் குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தனுஷ் குமார் திருநெல்வேலி (LLB) சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment