Home Uncategorizedதூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!

தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!

by bait
0 comments

தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சாவுடன் காவல் துறையினரால் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், கஞ்சா விற்பனை, கடத்தலை தடுக்க போலீசார் தனிப் படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு பணி

தனிப்படை எஸ்ஐ ரவிக்குமார் தலைமையிலான போலீசார், நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மதுரையில் இருந்து பைக்கில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கஞ்சா கடத்தல்

இதையடுத்து டவுன் பகுதியில் பதுங்கியிருந்த தூத்துக்குடி ஜெய்லானி தெருவை சேர்ந்த கந்தசிவா (20), மட்டக்கடையை சேர்ந்த தாமஸ் மகன் நிர்மல்ராஜ் (28) ஆகிய இருவரை மடக்கினர்.

இருவரைமடக்கியபோலீஸ்

விசாரணையில் 2 பேரும் கஞ்சாவை, மதுரையில் இருந்து கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத் திருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் 2 பேரையும் பிடித்து வட பாகம் போலீசில் ஒப்படைத்தனர்.         

கஞ்சா பறிமுதல்

 இவர்களிடம் இருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது      செய்தனர்.

banner

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment