Home Uncategorizedதலைக்கேறிய போதையில் அசுர வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர்.. பல்லாவரத்தில் கொடூர விபத்து.. ஐடி இளம்பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி!

தலைக்கேறிய போதையில் அசுர வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர்.. பல்லாவரத்தில் கொடூர விபத்து.. ஐடி இளம்பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி!

by bait
0 comments

மது அருந்திவிட்டு வேகமாக கார் இயக்கியதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், ஐடி இளம்பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கிருத்திகா (26), ஸ்ரீதர்‌ (29), அபிஷா (26) மற்றும் இவர்களது நண்பரான பங்கஜ் (18) ஆகிய நான்கு பேர் துரைப்பாக்கம் – பல்லாவரம் ரேடியல் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.

சென்னை கொரட்டூரை சேர்ந்த ஸ்ரீதர் (29) காரை வேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவற்றில் மோதி சினிமா காட்சியில் வருவதை போல கார் பல பல்ட்டி அடித்து விபத்துக்குள்ளானதில் கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது.

விபத்துக்குள்ளானதும் காரின் பின் கதவு திறந்ததால் பின்னால் அமர்ந்திருந்த கிருத்திகா சாலையில் விழுந்து பின்னர் சதுப்பு நிலத்தில் விழுந்துள்ளார். தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதுப்பு நிலத்தில் விழுந்த கிருத்திகாவை மீட்டு பரிசோதித்ததில் சம்பவ இடத்திலேயே ஐடி பெண் ஊழியர் கிருத்திகா உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

banner

இந்நிலையில் காரின் முன் பகுதியில் இரண்டு ஏர்பேக் ஓபன் ஆனதால் ஸ்ரீதர் பங்கஜ் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். அதேபோல் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு நபர் அபிஷா காரின் உள்ளே சிக்கிக் கொண்டு படுகாயம் அடைந்தார்.

விபத்துக்குள்ளான மூன்று பேரை மீட்டு, அருகில் உள்ள பல்லாவரம் (காமாட்சி மருத்துவமனை) தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்பொழுது காரை ஓட்டி வந்த ஓட்டுநர் ஸ்ரீதர் மற்றும் ஐடி பெண் ஊழியர்கள் இரண்டு பேர் உள்பட காரில் பயணித்த 4 பேரும் மது அருந்தி இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த கிருத்திகா பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்பதும், துரைப்பாக்கத்தில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். உயிரிழந்த கிருத்திகாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அப்பளம் போல் நொறுங்கிய காரை பறிமுதல் செய்து கார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது அருந்திவிட்டு போதையில் காரை அசுரர் வேகத்தில் ஓட்டிய இளைஞரால் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், பொள்ளாச்சியை சேர்ந்த இளம்பெண் பலியான சம்பவம் பாரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment