இலங்கை படகு மூலமாக போதைப் பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த ரகசியத் தககவலைத் தொடர்ந்து கடலோரக் காவல் படையினர் மற்றும் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பாம்பன் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று அதிகாலை தீவிர சோதனை நடத்தினர்.

இலங்கை படகு மூலமாக போதைப் பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த ரகசியத் தககவலைத் தொடர்ந்து கடலோரக் காவல் படையினர் மற்றும் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பாம்பன் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று அதிகாலை தீவிர சோதனை நடத்தினர்.
நடுக்கடலில் இருந்த ஒரு படகை சோதனை செய்தபோது, 111 பாக்கெட்டுகளில் 99 கிலோ கொண்ட ஹாஷிஸ் என்ற கஞ்சா எண்ணெய் இருந்தது.
படகிலிருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து, மண்டபம் கடலோரக் காவல் படை முகாமுக்கு கொண்டுவந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பாம்பனைச் சேர்ந்த ஒருவரிடம் போதைப் பொருளை பெற்று, அதை சர்வதேச கடல் பகுதியில் இலங்கையிலிருந்து வரும் சிலரிடம் ஓப்படைப்பதற்காக எடுத்துச் சென்றதாகத்” தெரிவித்தனர்.
தகவல் : INDIANEXPRESS
