தஞ்சை புதுப்பட்டிணம் யாகப்பா சாவடி பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் சிராஜுதீன் (34), அம்மா குளம் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் (29) என்பவருடன் ஏற்பட்ட வாய் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்டார். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சிராஜுதீன் தந்தை அளித்த புகாரின் பேரில் பிரதீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.