Home Uncategorizedடாஸ்மாக் கடைகளை தமிழக அரசு ஏன் தடை செய்யவில்லை? – நீதிபதிகள் கேள்வி

டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு ஏன் தடை செய்யவில்லை? – நீதிபதிகள் கேள்வி

by bait
0 comments

டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு ஏன் நடத்த வேண்டும் என்றும், ஆன்லைன் ரம்மியைப் போல டாஸ்மாக் கடையை ஏன் தடை செய்யவில்லை எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

=தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் அனைத்து கட்சிகளின் கோரிக்கை. ஆனால், அண்டை மாநிலங்களில் மது விற்பனை நடைபெறும் நிலையில், தமிழகத்தில் பூரண மது விலக்கு சாத்தியம் இல்லை என்று அரசை கைவிரித்துவிட்டது. ஆனால், டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதால், அவை வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. எனினும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் அமைக்க தொடர்ச்சியாக எதிர்ப்பு எழுவதும், பெண்கள் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

டாஸ்மாக் கடையை திறக்க தடை கோரி மனு

இந்த நிலையில் மதுரை கீழக்குயில் குடியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை கைத்தறி நகருக்கு மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்றன. இதற்கு எதிராக மேகலா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். அதில், டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்திற்கு அருகாமையில் அரசு பள்ளி, வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறப்பது விதிகளுக்கு முரணானது என்று குறிப்பிட்டார். மேலும் கைத்தறி நகரில் டாஸ்மாக் திறக்க தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போடு நீதிபதிகள், “ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை தமிழக அரசு அமைக்கிறது

banner

அரசு ஏன் டாஸ்மாக்கை நடத்துகிறது? – நீதிபதிகள்

மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டை அரசு முறைப்படுத்தியுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளில் வேறு மாதிரியான நிலைப்பாடு ஏன் என்று கேள்வி எழுப்பினர். “அரசு ஏன் டாஸ்மாக் கடையை நடத்த்ய வேண்டும்? அது அரசின் என்றும் நீதிபதிகள் கேட்டனர். ரம்மி, மது இரண்டுமே கொலை செய்பவை என்றும், மதுபானம் தான் ஊழல் போன்ற பல பிரச்சனைக்கும் காரணம் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு அதை ஊக்குவிப்பதில்லை என்று கூற, அதற்கு நீதிபதிகள், “அப்படியென்றால் எதற்காக மது விற்பனை செய்கிறீர்கள்? எல்லாரும் மதுக்கடைகள் மூடப்படும் என சொன்னாலும் யாரும் செய்வதில்லை” என்று கோபமாக பேசினர். இதனையடுத்து, அரசு தரப்பில், “மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது. கடைகள் படிப்படியாக மூடப்படும்” என்று உறுதி அளிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “அப்படி என்றால் ஏன் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர். தமிழக அரசானது வேலை வாய்ப்பு மற்றும் பொது நலனில் கவனம் செலுத்த வேண்டும், நல்ல விஷயங்களை செய்ய அரசு முன்வர வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், இதுகுறித்து தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment