கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் காக்கி என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குற்றவாளிகளின் தகவல்களை போலீசார் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

கோவை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் “SMART KHAKKI’S” என்ற புதிய திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்துள்ளார்.
குற்றவாளிகளை எளிதில் கண்டுப்பிடிக்கலாம்
இந்த திட்டத்தின் மூலம், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கவும், ரோந்து பணிகளை வேகப்படுத்தவும் புதிய கருவிகள் மற்றும் வாகனங்கள் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்களை செயலி மூலம் பதிவு செய்து, அவர்களின் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். மேலும், இருசக்கர வாகனங்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும் என்று எஸ்பி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
33 இருசக்கர வாகனங்கள்
கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் “SMART KHAKKI’S” திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக, கோவை மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு 33 இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. மேலும், கைரேகை கருவி, பாடி கேமரா, DD Machine, Advance Walky Talky, E challan Machine போன்ற புதிய உபகரணங்களும் வழங்கப்பட்டன.
பொதுமக்களின்பாதுகாப்பு
இந்த புதிய ரோந்து வாகனங்கள் குற்றத் தடுப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி கார்த்திகேயன், “SMART KHAKKI’S” திட்டம் குற்றவாளிகளை பிடிக்க உதவும் என்றார். குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் புகைப்படங்களை செயலில் பதிவு செய்தால், அவர்களின் முழு தகவல்களும் போலீசாருக்கு கிடைக்கும். மேலும், 24 மணி நேரமும் இருசக்கர வாகனங்கள் பெட்ரோலுடன் தயார் நிலையில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
பள்ளி, கல்லூரிபகுதிகள்
இந்த திட்டம் கல்லூரி, பள்ளி போன்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உதவும். குறிப்பாக அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை இந்த ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் இரண்டு முதல் மூன்று இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சூலூர்பகுதி
சூலூர் பகுதியில் காவலரை கத்தியால் குத்திவிட்டு மனைவியிடம் நகைகளைப் பறித்துச் சென்ற திருடர்கள் குறித்த துப்பு கிடைத்துவிட்டதாகவும், விரைவில் அவர்களை கைது செய்யப் போவதாகவும் எஸ்பி கார்த்திகேயன் தெரிவித்தார். “சூலூரில் பிடிபட்ட 235 கிலோ கஞ்சா ஆந்திர மாநிலத்தில் இருந்து வேற மாநிலத்திற்கு கொண்டு செல்லும் வழியில் தகவல் கிடைத்து பறிமுதல் செய்தோம்” என்று அவர் கூறினார்.
போதைப்பொருள்குறித்துவிழிப்புணர்வு
போதைப் பொருள் குறித்து இளைஞர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், கல்லூரிகள் திறந்துள்ளதால் மாணவர்களுடன் நேரடியாக சென்று போதைப்பொருளின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் இருக்க போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
குற்றங்களைகுறைக்கஉதவும்
“SMART KHAKKI’S” திட்டம் கோவை மாவட்டத்தில் குற்றங்களை குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் போலீசார் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை விரைவாக பிடிக்க முடியும். மேலும், ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படுவதால் குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்படும்.
தகவல் : TAMILSAMAYAM
