இதனையடுத்து இந்த சாலையில் பயணித்த வாகன ஓட்டுனர்கள் ஒன்றாக சேர்ந்து அச்சுறுத்தும் வகையில் செய்த டிப்பர் லாரியை நிறுத்தி,டிப்பர் லாரி ஓட்டுனரை இறங்க சொல்லி,கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் சிறை பிடித்தனர்,
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மது போதையில் வாகனங்களையும், சாலையில் நடந்து சென்றவர்களையும் இடிப்பது போல் அச்சுறுத்தி அதிவேகமாக டிப்பர் லாரியை இயக்கிய ஓட்டுனரை சிறை பிடித்த வாகன ஓட்டுனர்கள், காவல் துறையினர் விசாரணை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் கொடைக்கானலுக்கு வருவதற்கு வத்தலக்குண்டு, பழனி உள்ளிட்ட பிரதான மலைச்சாலைகள் உள்ளன. மேலும் இந்த மலைச்சாலை வழியாக பேருந்துகள் மற்றும் கட்டுமான பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வது, வெளியூர் பகுதியில் இருந்து கொண்டு வருவதற்கு லாரிகள், டிப்பர், பிக் அப் வாகனங்கள் உள்ளிட்ட அதிகமான கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தகவல் : NEWS18TAMIL
