Home Uncategorizedகுடிபோதையில் வந்த கொழுந்தன்… கதவை திறந்த அண்ணி… அடுத்து நடந்த விபரீதம்

குடிபோதையில் வந்த கொழுந்தன்… கதவை திறந்த அண்ணி… அடுத்து நடந்த விபரீதம்

by bait
0 comments

திட்டக்குடி அருகே சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்த கொழுந்தனார் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரேமலதா (வயது 25). இந்நிலையில், வெங்கடேசனுக்கும் அவரது தம்பி காசிநாதனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெங்கடேசன் வெளியூர் சென்ற நிலையில் பிரேமலதா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனை அறிந்த காசிநாதன் குடித்துவிட்டு பிரேமலதா வீட்டிற்கு சென்றார். அங்கு சொத்து குறித்து அண்ணியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது இருவருக்குள்ளும் வாய் தகராறு முற்றியது. அண்ணன் இல்லாத நேரத்தில் குடித்துவிட்டு இங்கு ஏன் வந்தாய் என காசிநாதனை பிரேமலதா திட்டியுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேமலதாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பிரேமலதா பலத்த காயம் ஏற்பட்டு கூச்சலிட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூறினார். பின்னர் பிரேமலதா உடலை ராமநத்தம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காசிநாதனை ராமநத்தம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

banner

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment