Home Uncategorizedகாஞ்சிபுரம்: வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது – கீரை என நினைத்த அப்பாவி குடும்பம்!

காஞ்சிபுரம்: வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது – கீரை என நினைத்த அப்பாவி குடும்பம்!

by bait
0 comments

காஞ்சிபுரத்தில் வீட்டில் தண்ணீர் கேனில் வைத்து கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நாளுக்குநாள் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. நகரங்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களில் கூட எளிதில் கஞ்சா கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினு, அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு பலர் மறைவாக கஞ்சா செடி வளர்ப்பதையும் பார்க்க முடிகிறது.

வீட்டிலேயே கஞ்சா செடி

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி. இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கண்ணுசாமி வீட்டில் வீணாகி போன தண்ணீர் கேனில் மண்ணை நிரப்பி ஒரு செடி வளர்த்துள்ளார்.

இதுகுறித்து வீட்டில் இருந்தவர்கள் கேட்டபோது, அது புளிச்ச கீரை செடி என சமாளித்துள்ளார் கண்ணுசாமி. வீட்டில் இருந்தவர்களும் இதனை நம்பியுள்ளனர். இதற்கிடையே, கண்ணுசாமி வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது அக்கம் பக்கத்தில் தெரிய தொடக்கியுள்ளது.
காவல்துறை விசாரணை

இதனையடுத்து, இந்த விவகாரம் சிவ காஞ்சி காவல்துறைய்யினருக்கும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பல்லவர்மேட்டில் உள்ள கண்ணுசாமி வீட்டிற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவர்களுக்கு கிடைத்த பதில் அதிர்ச்சியை அளித்துள்ளது.

காரணம் என்னவென்றால் கஞ்சா செடி குறித்து காவல்துறையினர் கேட்டபோது, அதனை புளிச்ச கீரை செடி என நினைத்து வளர்த்து வருவதாக அவரது குடும்பத்தினர் கூறி இருக்கிறார்கள்.

கஞ்சா செடி வளர்த்த கார் ஓட்டுநர் கைது

இதனைத் தொடர்ந்து, வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து வந்த கார் ஓட்டுநர் கண்ணு சாமியை சிவ காஞ்சி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர்.

வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்துவிட்டு அதனை கீரை செடி என குடும்பத்தினரை நம்ப வைத்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கஞ்சா புழக்கத்திற்கு எதிராக காவல்துறையினர் மேலும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தகவல் : TAMILSAMAYAM

banner

You may also like

Leave a Comment