Home Uncategorizedகஞ்சா விற்பனை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து கோவை காவல் நிலையத்தில் தந்தை தீக்குளிக்க முயற்சி!

கஞ்சா விற்பனை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து கோவை காவல் நிலையத்தில் தந்தை தீக்குளிக்க முயற்சி!

by bait
0 comments

கஞ்சா விற்பனை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து கோவை காவல் நிலையத்தில் தந்தை தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து தந்தை காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு வந்த தகவல்
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் பொதுக்கழிப்பிடம் அருகே இளைஞர்கள் நேற்று கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சோதனை செய்ததில் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் மற்றும் மணி பரத் என்ற இரண்டு இளைஞர்கள் கையில் கஞ்சாவுடன் பிடிபட்டனர்.107 கிராம் அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்
இதை அடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 107 கிராம் அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

காவல்துறையினர் பொய்யாக கஞ்சா வழக்கு பதிவு
இந்த நிலையில் தனது மகன் மணிபரத் மீது காவல்துறையினர் பொய்யாக கஞ்சா வழக்கு பதிவு செய்ததாக கூறி அவரது தந்தையான கவுண்டம்பாளையம் சிவாநகர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்து திடீரென தான் கையில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் உடனடியாக தீயை அணைத்து சேகரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைப்பு
இதை அடுத்து அங்கிருந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்து சேகரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள சேகர் பாரத் சேனா அமைப்பின் நிர்வாகியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும் பரபரப்பு
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தேவநாதன் மற்றும் உதவி ஆணையர் கோபாலகிருஷ்ணன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment