Home Uncategorizedஎதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா மனு; போதை நகரமாக மாறி வரும் புதுச்சேரி!

எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா மனு; போதை நகரமாக மாறி வரும் புதுச்சேரி!

by bait
0 comments

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா காவல்துறையினருக்கு மனு அளித்தார். அந்த மனுவில் சுற்றுலாத்தலமாக விளங்கி வந்த புதுச்சேரி தற்போது கஞ்சா போன்ற போதை நகரமாக மாறி வருகின்றது. மேலும் தனியார் விடுதி அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் எந்த ஒரு அச்சமும் இன்றி வாழ்வதற்கு காவல் துறையினர் போதை பொருட்களை முற்றிலும் அளிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா காவல் துறை தலைவரிடம் அவர் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது புதுச்சேரி மாநில காவல் துறை தலைவராக தாங்கள் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகின்றது. தாங்களும் ஒவ்வொரு காவல் நிலையமாக சென்று ஆய்வு நடத்தி காவல் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வரப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகளுக்குதகுந்தபாதுகாப்பு
ஆனால் தங்கள் வருகை மூலம் புதுச்சேரியில் கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு தடுப்பீர்கள் என்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அரணாக காவல் துறையை மாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை அனைவரிடம் இருந்தது.

விடுதி அறையில் ரகசிய கேமரா
ஆனால் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகின்றது. ஏற்பட்டுள்ளது. உருளையன்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு தனியார் விடுதியில் கடந்த வாரம் அறை எடுத்து தங்கிய சுற்றுலா தம்பதிகள் விடுதி அறையில் ரகசிய கேமரா வைத்து பதிவு செய்ததை கண்டுபிடித்து காவல் துறையிடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த வழக்கில் காவல் துறை கடமைக்கு இருவரை கைது செய்துள்ளனர்.

உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை
மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள். இவர்கள் புதுச்சேரியில் வேறு எங்காவது விடுதிகள் லீசுக்கு எடுத்து ரகசிய கேமரா வைத்து பதிவு செய்துள்ளனாரா போன்ற தகவல்களை பெற உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் காவல் துறை சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்றார்.

தனியார் விடுதிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
அதனை தொடர்ந்து குற்றப்பின்னணியில் அரசியல் தலையீடு இல்லாமல் காவல் துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும். புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களை செய்வோர் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதை நகரமாக மாறும் புதுச்சேரி
புதுச்சேரியில் கஞ்சா, ஹெராயின் போன்ற போதை வஸ்துக்களால் மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், சுற்றுலாப் பயணிகள் சீரழியக்கூடிய நிலை தொடர்கதையாகியுள்ளது. மேலும் சுற்றுலாவிற்கு புகழ்பெற்ற புதுச்சேரி இன்று போதை நகரமாக, பாதுகாற்ற நிலையில் இருக்கின்றது.

banner

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment