Home Uncategorizedஅரசுப் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா போதை கும்பல் தகராறு – அண்ணாமலை கண்டனம்!

அரசுப் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா போதை கும்பல் தகராறு – அண்ணாமலை கண்டனம்!

by bait
0 comments

அவர் விடுத்துள்ள பதிவில், பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், தமிழகம் முழுவதுமே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் நிலையில், தற்போது, பள்ளி செல்லும் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அவல நிலையில் தமிழகம் இருப்பது வெட்கக்கேடு என கூறியுள்ளார்.

உடனடியாக, மாணவர்களை வெட்ட முயன்ற சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும், பொது இடங்களில் போதையில் இருப்பவர்களால் பிரச்சினை ஏற்படாமல் கண்காணிக்க, காவல்துறை ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளின் அருகே, போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும்  திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தகவல் : TAMILJANAM

banner

You may also like

Leave a Comment